Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் உலக மருந்தாளுனர்கள்  தின நிகழ்ச்சி

செப்டம்பர் 27, 2023 01:01

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் உலக மருந்தாளுனர்கள்  தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை கல்லூரி தலைவர் க.சிதம்பரம் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ம.செந்தில்ராஜா  வரவேற்புரை நிகழ்த்தினார். 

சிறப்பு விருந்தினராக விநாயாக மிஷன்ஸ் ரிசர்ச் பவுண்டேசனின் இயக்குனர் மற்றும் பதிவாளர் டாக்டர் பி.ஜெய்கர்  கலந்து கொண்டு பேசும்போது, தற்போது மருந்தாளுனர்களின் நிலை, முக்கியத்துவம், தேவைகள், பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து சொற்பொழிவு ஆற்றினார்.  

பின்னர் மாணவ, மாணவிகளுக்கு வினாடி வினா, கட்டுரைப் போட்டி, விழிப்புணர்வு சுவரொட்டி தயாரித்தல், ரங்கோலி, தீயில்லா சமையல் மற்றும் உடலுறுப்பு தானத்தை பற்றி வாசகம் எழுதுதல் போன்ற  பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டது. 

 போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளும், பங்கு கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. கல்லூரியின் உதவி பேராசிரியர் ஜெ.அருண்பாண்டியன் அவர்கள் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்